News September 28, 2025
விஜய்க்கு எதிராக பாதிக்கப்பட்டவரே வழக்கு

தவெக பரப்புரைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த செந்தில் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்துள்ளார். முறையான பாதுகாப்பு இல்லாமல் இனி தவெக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.
Similar News
News September 28, 2025
இளம் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

ராஜஸ்தான், கோட்டாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர் ஷர்மா(10) மற்றும் அவரது அண்ணன் சவுர்யா(15) இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘வீர் ஹனுமான்’ சீரியலில் நடித்த வீர் ஷர்மா, நாடு முழுவதும் மிகவும் பிரபலமடைந்தார். குறிப்பாக சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி வரும் ‘நெக்ஸ்ட்’ படத்தில் நடித்து வந்தார். வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் தீ விபத்து நேர்ந்துள்ளது. #RIP
News September 28, 2025
லடாக் கலாச்சாரத்தின் மீது பாஜக தாக்குதல்: ராகுல்

லடாக் மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். லடாக்கின் கலாச்சாரமும், பாரம்பரியமும் RSS மற்றும் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மக்களுக்கு, 4 பேரைக் கொன்றும், சோனம் வாங்சுக்கை கைது செய்தும் மத்திய அரசு பதிலளித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News September 28, 2025
ஒரே நாளில் ரேஷன் கார்டு.. வழிமுறைகள் இதோ!

TN-ல் ரேஷன் கார்டுக்கு மனு கொடுத்து ஒரே நாளில் பெற முடியுமா? என்றால் முடியும். அதற்கான வழி இருக்கிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் ஆபிஸில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தால் உடனடியாக பரிசீலனை செய்து கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் கூட பலருக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு, பட்டா, ஓய்வூதிய சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.