News September 27, 2025
உடற்பயிற்சிக்கு பின் வெந்நீரில் குளித்தால் சிக்கலா?

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Similar News
News September 27, 2025
இன்று முதல் விடுமுறை..

காலாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளும் அக்.5 வரை 9 நாள்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். காலாண்டு விடுமுறை நாள்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
News September 27, 2025
இன்று விஜய் பேசப்போவது என்ன?

இன்று நாமக்கல், கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தவிருக்கிறார். தனது பரப்புரையின்போது, அந்தந்த மாவட்டங்களின் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் பேசுவது வழக்கம். அந்த வகையில், தற்போது அரசியலில் பரபரப்பாக பேசப்படும் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து நாமக்கல்லிலும், கரூரில் செந்தில் பாலாஜியை மையமாக வைத்தும் விஜய்யின் பேச்சு இருக்கும் என சொல்லப்படுகிறது.
News September 27, 2025
ஆஸ்துமா பிரச்னைக்கு இந்த மூலிகை தேநீரை குடிங்க!

சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் கல்யாண முருங்கை இலை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➥கல்யாண முருங்கை இலைகளை கழுவி, சிறு சிறு பொடியாக நறுக்கவும் ➥தண்ணீரில் இவை, 3- 5 நிமிடங்கள் வரை நன்கு கொதித்த பிறகு, வடிகட்டி கொள்ளவும் ➥சுவைக்காக சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவையான கல்யாண முருங்கை தேநீர் ரெடி. SHARE IT.