News April 13, 2024
புதுவை: வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பெற வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
ரெட்டியார் பாளையம் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்

புதுச்சேரி காவல்துறை தலைவர் டிஜிபி உத்தரவுபடி புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் இன்று (நவ.15) பொதுமக்கள் குறைதீர்வு நாள் முகாம் நடைபெற்றது. அதன்படி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் எஸ்பி ரகுநாயகம் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகாராக தெரிவித்தனர். அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
News November 15, 2025
காரைக்காலில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

(நவ.15) காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் காரைக்கால் குடியுரிமை பாதுகாப்பு பிரிவு காவல் நிலையத்தில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிரவி திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மரி கிறிஸ்டியன் பால், நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 15, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <


