News April 13, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளம்பட்டியில் 100% வாக்கு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரயு அங்குள்ள வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை சுவர்களில் ஒட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Similar News

News January 13, 2026

கிருஷ்ணகிரி: விபத்தில் மூதாட்டி பலி!

image

பந்தாரப்பள்ளி, ஓசூர்-கிருஷ்ணகிரி NH-ல் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாகி அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருகின்றனர்.

News January 13, 2026

கிருஷ்ணகிரி: துக்க வீட்டுக்கு சென்ற பெண் பலி!

image

பெரிய ஜோகிப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (52) நேற்று முன்தினம் (ஜன.12) தனது சித்தியான முருகம்மாளுடன் (54) துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு சாமல்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி – தி.மலை NH-இல் பின்னால் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மத்தூர் போலீசார் விக்னேஷ் (27) எனபவரை கைது செய்தனர்.

News January 13, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!