News April 13, 2024
இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதை பின்பற்றலாம்

மன அழுத்தம், அதிக வேலை போன்றவை தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கின்றன. சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வரும். உண்மையில் அது வரம். தூக்கமின்மையால் அவதிப்படுவோர், தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்கும் பழக்கத்தை முயற்சிக்க வேண்டும். மேலும், இரவு உணவில் கூடுதல் கவனம் செலுத்தி திடமான, காரமான உணவுகளை தவிர்க்கலாம். தூங்குவதற்கு முன்னர் சூடான அல்லது மிதமான தண்ணீரில் குளியல் போடலாம்.
Similar News
News August 17, 2025
கட்சி பொறுப்பில் இருந்து முத்தரசன் விடுவிப்பு?

இந்திய கம்யூ., கட்சியின் மாநில பொறுப்பிலிருந்து முத்தரசன் விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 75 வயதான முத்தரசன், 3 முறை மாநிலச் செயலாளர் பதவியை வகித்துவிட்டார். இதனால், இன்று சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில், துணை நிர்வாகப் பொறுப்பில் உள்ள வீரபாண்டியன், சந்தானம் அல்லது பெரியசாமி ஆகியோரில் ஒருவர் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
News August 17, 2025
ஆவணி ஞாயிற்றுக்கிழமையும்.. சூரிய வழிபாடும்!

ஆவணி ஞாயிற்றுக்கிழமையில், பூஜைக்காக அர்ச்சனை தட்டில் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும். சூரியன் உதிக்கும் திசை நோக்கி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, நீரை அர்ச்சனைத் தட்டின் மீது தெளிக்க வேண்டும். மாலை வரை தண்ணீர், பால், பழங்கள் ஆகியவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு விரதமிருக்க வேண்டும்.
News August 17, 2025
ED சோதனை வெறும் ஏமாற்று வேலை: சீமான்

ED நடவடிக்கை வெறும் ஏமாற்று வேலை என சீமான் விமர்சித்துள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் E.D சோதனை நடத்தியுள்ளது. இதுபற்றி பேசிய சீமான், ED சோதனையால் என்ன பயன், என கேள்வி எழுப்பிய அவர், ED எங்கெல்லாம் சோதனை நடத்துகிறதோ அங்கெல்லாம் அவர்கள் பணம் வாங்கியிருப்பதாகவும், அதற்கெல்லாம் ஆதாரம் வேண்டுமானால் தானே தருவதாகவும் தெரிவித்தார்.