News April 12, 2024

இந்திராவை கொன்றவரின் மகன் தேர்தலில் போட்டி

image

இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். 1984ம் ஆண்டில் இந்திராவை அவரது 2 பாதுகாவலர்கள் சுட்டுக் கொலை செய்தனர். அதில் ஒருவரான பேயந்த் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் கால்சா, ஃபரீத்கோட் தொகுதியில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அத்தொகுதி மக்களில் பலர் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

விஜய் சேதுபதியை இயக்க ரெடியாகும் மகிழ் திருமேனி!

image

‘விடாமுயற்சி’ படம் தோல்வியாக அமைந்தாலும், இயக்குநர் மகிழ் திருமேனி தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். தமிழ், ஹிந்தி என இருமொழி படமாக உருவாகும் இதில், ஹீரோவாக விஜய் சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும், ஷ்ரத்தா கபூர், சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ‘தடம்’, ‘தடையற தாக்க’ போன்ற ஒரு அசத்தல் படத்தை மீண்டும் மகிழ் கொடுப்பாரா?

News November 13, 2025

மெட்ரோ ரயில்வே டிராக்கில் சோலார் பேனல்கள்

image

நாட்டிலேயே முதல்முறையாக, RRTS (அ) மெட்ரோ ரயில்வே டிராக்குகளில் சோலார் பேனல்களை வைத்து மின் உற்பத்தி செய்யும் ‘Solar on track’ எனும் திட்டம், உ.பி.,யின் துஹாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 17,500 kWh எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஆண்டு முழுவதும் 16 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுக்க முடியும். 550 Wp திறன் கொண்ட 28 உயர்திறன் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.

News November 13, 2025

எங்கு பார்த்தாலும் Content Creator-கள் தான்!

image

இந்தியாவில் தற்போது 14- 24 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறையினரில் சுமார் 83% பேர் Content Creator-களாக மாறி இருக்கிறார்களாம். 93% பேர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை குறித்து தொடர்ந்து யூடியூப்பில் பார்த்து வருவதாகவும், 87% பேர் ஏதாவது ஒரு யூடியூப் பக்கத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 78% பேர், யூடியூப்பில் யாரோ ஒருவர் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.

error: Content is protected !!