News April 12, 2024
IPL: அடுத்த போட்டியில் மேக்ஸ்வெல் இல்லை

ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், மேக்ஸ்வெல்லுக்கு கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவருக்கு, அடுத்த போட்டியில் ஓய்வு வழங்கப்படவுள்ளது. SRH-RCB இடையேயான 30ஆவது ஐபிஎல் போட்டி, வரும் ஏப்.15ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
Similar News
News July 6, 2025
தம்பதியரே, எச்சரிக்கையா இருங்க…

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் செக்ஸ் செயல்திறனும் குறையக்கூடும்.
News July 6, 2025
சிவசேனாவை போல் பாமகவை உடைக்க பாஜக முயற்சி: KS

மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது போல் பாமகவை உடைக்க பாஜக முயல்வதாக கே.செல்வப்பெருந்தகை(KS) குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸை சந்தித்த பிறகு திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க செல்வப்பெருந்தகை முயல்வதாக கருத்து எழுந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் – விசிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் X தளத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் பாமகவுக்கு ஆதரவான பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
News July 6, 2025
புதிய ரேஷன் கார்டுகள்… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், புது ரேஷன் கார்டு பெற ஈசியான வழி கிடைத்துள்ளது. ஜூலை 15-ல் தொடங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீர்வு காண CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாம்களில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் அளித்தால் உடனே அரசு ஒப்புதல் வழங்கும் எனக் கூறப்படுகிறது. உடனே முந்துங்கள். SHARE IT.