News April 11, 2024
தேர்தல் பறக்கும் படை எவ்வாறு செயல்படுகிறது?

தேர்தல் நடத்தை விதி அமலானதும் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள ரொக்கம் அல்லது பொருள்களை கொண்டு செல்வதை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். அதே போல பணப்பட்டுவாடா தொடர்பான புகார் கிடைத்ததும் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். பிறகு 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் அலுவலருக்கு பறக்கும் படை அறிக்கை அளிக்கும்.
Similar News
News February 8, 2026
நடிகர் சுனில் காலமானார்.. பிரியங்கா வேதனை

<<19075789>>நடிகர் சுனில் தாபா<<>> மறைவுக்கு பிரியங்கா சோப்ரா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘எப்போதுமே நீங்கள் தான் எனது கோச். நான் எனது தந்தையை இழந்தபோது நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள். என் கடினமான காலத்தில் நிறைய உதவிகளை செய்திருக்கிறீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார். ‘மேரி கோம்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கோச் கேரக்டரில் சுனில் தாபா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News February 7, 2026
ஓபிஎஸ் எங்களுடன் தான் இருக்கிறார்: அண்ணாமலை

OPS இதுவரை எந்த கூட்டணியிலும் இணையாததால் அவரின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் OPS தனித்து விடப்படவில்லை, எங்களுடன்தான் இருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவின் வெற்றியை கெடுக்கும் வகையில் OPS நடந்துகொள்ள மாட்டார் என <<19074873>>TTV தினகரனும்<<>> தெரிவித்திருந்தார். இதனால் NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News February 7, 2026
விஜய்யால் அனைத்து கட்சிகளுக்கும் ஆபத்து: வாசன்

விஜய்யின் வாக்கு சதவீதத்தை 10-க்கும் குறைவாக இருக்குமென்று யாரும் கூறியதாக தெரியவில்லை; எனினும் அதனை உறுதிப்படுத்துபவர்கள் வாக்காளர்களே என ஜி.கேவாசன் பேசியுள்ளார். மதுரையில் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகையால் அனைத்து கட்சிக்கும் ஆபத்து என்றார். அவர் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றாலும் அதில் தமாகா உள்பட அனைத்து கட்சியின் வாக்கு சதவீதமும் அடங்கும் எனவும் கூறியுள்ளார்.


