News April 10, 2024
ஒரே நாளில் 14 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News November 13, 2025
பிஹாரில் NDA தான் வெல்லும்.. ஆனால் CM தேஜஸ்வி!

இன்று வெளியான <<18269712>>Axis My India <<>>கருத்து கணிப்பிலும் பிஹாரில் NDA கூட்டணி தான் வெல்லும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த CM ஆக யார் வர வேண்டும் என்ற கருத்துக்கணிப்பில் நிதிஷ்குமாருக்கு 22% பேரும், தேஜஸ்வி யாதவ்விற்கு 34% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு 4% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
News November 13, 2025
திருமணத்திற்கு Expiry Date வேண்டும்: கஜோல்

திருமணத்திற்கு Expiry Date மற்றும் Renewal ஆப்ஷன்கள் இருக்க வேண்டும் என நடிகை கஜோல் தெரிவித்துள்ளார். நீங்கள் சரியான நபரை தான் கரம் பிடித்திருக்கிறீர்களா என்பது தெரியாத போது, Renewal ஆப்ஷன் பயன்படும். சண்டைகள், முரண்கள் நிறைந்த மண வாழ்க்கையில் நீங்கள் நீண்ட நாள்கள் கஷ்டப்படக் கூடாது என்பதாக Expiry Date ஆப்ஷன் பயன்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது கருத்தை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
News November 13, 2025
டெல்லி சம்பவம்: 300 கிலோ வெடிபொருள்கள் எங்கே?

டெல்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து, வங்கதேசம் & நேபாள் வழியாக இந்தியாவிற்கு வெடிபொருள்கள் கொண்டுவரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மொத்தம் 3,200 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கொண்டுவரப்பட்டது. அதில் 2,900 கிலோ கைப்பற்றிய நிலையில், மீதமுள்ள 300 கிலோவை போலீசார் தேடி வருகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று (டிச.6) இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.


