News April 10, 2024
கச்சத்தீவில் யாராவது வாழ்ந்தார்களா?

இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்க்க காங்கிரஸும், திமுகவுமே காரணமென வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “கச்சத்தீவில் யாராவது வாழ்ந்தார்களா என கேட்க விரும்புகிறேன்” என கூறியிருந்தார். இந்தப் பேச்சு, தேசம் முக்கியமில்லையென்ற காங்கிரஸின் மனநிலையை வெளிப்படுத்துவதாக பாஜக விமர்சித்துள்ளது.
Similar News
News April 25, 2025
ஏப்ரல் 25: வரலாற்றில் இன்று

▶ உலக மலேரியா நாள். ▶ 1874 – ரேடியோவை கண்டுபிடித்த இயற்பியலாளர் மார்க்கோனி பிறந்த நாள். ▶ 1906 – எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிறந்த நாள். ▶ 1912 – தமிழ் அறிஞர் மு. வரதராசன் பிறந்த நாள். ▶ 1644 – சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென் தற்கொலை செய்து கொண்டார். ▶ 2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.
News April 25, 2025
அப்பாடா.. சொந்த மண்ணுல ஜெயிச்சிட்டோம்!

இதுதான் RCB ரசிகர்களோட தற்போதைய ரியாக்ஷன். வெளி மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அந்த அணிக்கு, சொந்த மைதானமான பெங்களூருவில் வெற்றி கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறது RR அணி. சொந்த மண்ணில் முதல் 3 போட்டிகளில் தோற்ற RCB, நேற்றைய போட்டியில் வாகை சூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் விளையாடிய RCB, 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.
News April 25, 2025
போருக்கு தயாராகும் பாகிஸ்தான்!

இந்திய எல்லையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை பாக். ராணுவம் அதிகரித்து வருகிறது. பதுங்கு குழியில் இருந்து மட்டுமே கண்காணிக்கவும், ராவல்பிண்டியில் உள்ள 10 படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீவிர உஷார் நிலையில் இருக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய எல்லை பகுதி மட்டுமில்லாமல், சர்வதேச எல்லைகளான சியால்கோட், குஜ்ரன்வாலா பகுதிகளிலும் வீரர்களை அதிகரித்து வருகிறது.