News April 10, 2024

தாத்தாவுக்கு பாகுபலி விருந்து கொடுத்த பேரன்கள்

image

ஆந்திராவில் புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் பாகுபலி விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், யுகாதி பண்டிகையொட்டி பட்டயக்குடம் பகுதியில் உள்ள நாக சூர்யா என்ற முதியவரின் வீட்டிற்கு சென்ற அவரது பேரன்கள், அவருக்கு ரொட்டிகள், இனிப்பு, பழங்கள், பொங்கல் என பாகுபலி விருந்து கொடுத்து அசத்தியுள்ளனர். இவற்றை ருசி பார்த்த அவர், மனம் நெகிழ்ந்து போனார்.

Similar News

News November 12, 2025

‘மந்தாகினி’ ஆக மிரட்டும் பிரியங்கா சோப்ரா

image

பிரமாண்டத்திற்கு பெயர்போன ராஜமெளலியின் அடுத்த படைப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. PAN இந்தியா படமாக உருவாகியுள்ள GLOBETROTTER-ல் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக மகேஷ் பாபுவின் கதாபாத்திர அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் 15-ம் தேதி படத்தின் டைட்டில் ரிலீஸ் நிகழ்வு, ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

News November 12, 2025

சந்தேக வளையத்திற்குள் Al-Falah பல்கலைக்கழகம்!

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், ஹரியானாவின் Al-Falah பல்கலை. சந்தேக வளையத்திற்குள் சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாஹீன் சயீத், முஸம்மில் ஷகீல் உள்ளிட்ட பல டாக்டர்கள் Al-Falah பல்கலை.-யில் பணியாற்றியுள்ளனர். தீவிரவாத நடவடிக்கைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் <<18268646>>நிசார்-உல்-ஹசன்<<>> எப்படி பல்கலை.-யில் பணி நியமனம் செய்யப்பட்டார் என்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

News November 12, 2025

சென்னை – விஜயவாடா வந்தே பாரத் நரசபூர் வரை நீட்டிப்பு

image

சென்னை – விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்று முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 5:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில்(20677), ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா வழியாக பிற்பகல் 2:10 மணிக்கு நரசபூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் 2:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(20678) இரவு 11:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

error: Content is protected !!