News September 2, 2025

₹1,000 மகளிர் உரிமை தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

image

வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், தமிழகம் திரும்பியதும் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி புதிய அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான மகளிருக்கு எப்போது ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அரசு வெளியிட உள்ளதாம். தயாராக இருங்க தாய்மார்களே..!

Similar News

News September 3, 2025

ரஜினியே ரத்தத்தை நம்பி இருக்கிறார்: ராதா ரவி

image

வெட்டுக்குத்து உள்ள படங்கள் தான் தற்போது வெற்றி பெறுவதாக ராதா ரவி தெரிவித்துள்ளார். பட விழா ஒன்றில் பேசிய அவர், ரஜினிகாந்த் படத்திலேயே ரத்தக்கறைகள் படிந்துள்ளதாகவும், அவரே ரத்தத்தை நம்பி இருக்கும்போது நாம் என்ன பெரிய ஆளா? என்று கூறினார். சமீபத்தில் வெளியான ‘கூலி’ படம் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் படங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதா?

News September 3, 2025

10-வது மட்டுமே படித்தவர் ₹1 கோடி சேமித்த கதை

image

பெங்களூருவில் 10-வது மட்டுமே படித்த நபர் ஒருவர், 25 ஆண்டுகளில் ₹1 கோடி சேமித்து கவனத்தை ஈர்த்துள்ளார். ₹4,200 சம்பளத்தில் வேலையை தொடங்கிய அவர், வங்கிகளில் FD, RD மூலம் பணம் சேமித்துள்ளார். வேலைக்கு சேர்ந்த அடுத்த சில ஆண்டுகளில் கடின உழைப்பால் ₹63,000 வரை சம்பளம் உயர்ந்தாலும் அவர் வீடு, கார் என எதையும் வாங்கவில்லை. நமது இலக்குகளை அடைய பொறுமையும், ஒழுக்கமும் அவசியம் என அவர் கூறுகிறார்.

News September 3, 2025

2026 தேர்தலில் 4வது இடத்தில் அதிமுக: புகழேந்தி

image

2026 தேர்தலில் சீமானுடன் EPS போட்டி போட வேண்டியிருக்கும் என புகழேந்தி பேசினார். நெல்லையில் பேசிய அவர், அதிமுக பலமடைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் பிரிந்திருந்தால் 4வது இடத்திற்கு தள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இதே நிலை நீடித்தால் திமுக வெற்றி பெறுவதற்கு EPS காரணமாகி விடுவார் என்று கூறினார். அதிமுகவை ஒருங்கிணைக்க நினைக்கும் சசிகலா வீட்டிலேயே பதுங்கி கொள்வதாக அவர் சாடினார்.

error: Content is protected !!