News April 9, 2024
IPL: பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/9 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4, ஹர்ஷல் படேல் 2, சாம் கரண் 2, ரபாடா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து PBKS அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 17, 2026
பள்ளியிலேயே மாணவிகள் மது குடிக்கும் காட்சி..EPS வேதனை

சென்னையில் திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பேசிய EPS, திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒட்டுமொத்த TN மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சட்டினார். பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்டு சாடிய அவர், பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் காட்சியை பார்க்கையில் வேதனையளிப்பதாக தெரிவித்தார். மேலும், கிட்னி திருட்டு, மணல் கொள்ளையை திமுக அரசு தடுக்கவில்லை என்றார்.
News March 17, 2026
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. ஹேப்பி நியூஸ்

ஜூன் மாதம் வரையிலான ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை மாநிலங்கள் முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோதுமை, அரிசி ஏப்.1 வரைக்குமான தேவைப்படும் கையிருப்பு அளவை விட சுமார் 185% அதிகமாக இருக்கிறது. அதிக அளவு தானியங்கள் இருப்பு உள்ளதாலும், அடுத்த சில வாரங்களில் புதிய கோதுமை கொள்முதல் தொடங்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
News March 17, 2026
இலங்கையில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்கள்

போர் பதற்றத்தால் இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்கள் ஆகும். அதேபோல், 2022-ல் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின்போது கொண்டுவரப்பட்ட QR Code முறை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் பைக்குகளுக்கு வாரத்திற்கு 5 லிட்டர், கார்களுக்கு 15 லி மட்டுமே எரிபொருள் கிடைக்கும்.


