News April 9, 2024
IPL: பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/9 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4, ஹர்ஷல் படேல் 2, சாம் கரண் 2, ரபாடா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து PBKS அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
வரலாற்றில் இன்று

*1770–இசைமேதை பீத்தோவன் பிறந்தநாள்.
*1928 – சென்னை மாகாண முதல் CM பனகல் அரசர் நினைவு நாள்.
*1971 – போரில் இந்தியா ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர்.
*1971 – பிரிட்டனிடம் இருந்து பஹ்ரைன் அரசு விடுதலை பெற்றது.
*1991 – சோவியத் யூனியனில் இருந்து கஜகஸ்தான் விடுதலை பெற்றது.
News December 16, 2025
IPL மினி ஏலத்தின் பட்டியலில் கடைசி நேரத்தில் டுவிஸ்ட்

IPL-ன் மினி ஏலம் அபுதாபியில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் உள்பட 19 வீரர்களின் பெயர்கள் ஏலப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து ஏலத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 369-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேரை மட்டும் IPL அணிகளால் எடுக்க முடியும். CSK(43) மற்றும் KKR (64) அதிக தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகின்றன.
News December 16, 2025
கேரளத்தின் வெற்றி TN-ல் எதிரொலிக்கும்: நயினார்

கேரளாவின் திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக <<>>கைப்பற்றி இடதுசாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் கேரளத்தில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்படுவதாகவும், அதை பாஜக சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


