News August 23, 2025

நகை கடன்.. மக்களுக்கு முக்கிய தகவல்

image

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.

Similar News

News March 15, 2026

தமிழகம், புதுவை தேர்தல் தேதி.. அதிரடியாக மாறியது

image

தமிழகம், புதுச்சேரிக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஒரே நாளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வந்தது. ஆனால், இம்முறை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்து வெவ்வேறு தேதிகளில் தேர்தலை நடத்தவுள்ளது. 1996-ல் ஏப்.27-ம் தேதி புதுச்சேரிக்கும், மே 2-ல் தமிழகத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு தற்போதுதான் வெவ்வேறு தேதிகளில் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

News March 15, 2026

BREAKING: தமிழகம் முழுவதும் விடுமுறை

image

TN சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறையாகும். கோடை விடுமுறை என்பதால், பள்ளிகளுக்கு ஏற்கெனவே லீவுதான். கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.23 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரிக்கு ஏப்.9 அன்று பொது விடுமுறையாகும். மறக்காமல் வாக்களியுங்கள் மக்களே!

News March 15, 2026

நெருங்கும் தேர்தல்.. ₹500 கட்டுகளுக்கு RBI கட்டுப்பாடு

image

5 மாநில தேர்தல் காரணமாக, பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மூலம் ECI பணிகளை தொடங்கியுள்ளது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் ₹5 லட்சத்துக்கு மேல் ₹500 கட்டுகள் வழங்கக்கூடாது என RBI வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம். அதேநேரம், ₹200, ₹100 நோட்டுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

error: Content is protected !!