News August 23, 2025

வழக்கு சாட்சி: குழந்தைகளை பாதுகாக்க அரசு புதிய முடிவு!

image

வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க TN அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழு ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாம். கோவையில் 8 வயது மகளின் கண்முன்னே அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Similar News

News August 24, 2025

DMK, TVK தான் போட்டி: பெங்களூர் புகழேந்தி

image

வரும் தேர்தலில் திமுக​வுக்​கும், தவெகவுக்​கும் தான் போட்டி என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்க்கு என்ன தெரி​யும் என பலர் கேட்​பதாகவும், கட்சி தொடங்​கிய 7 மாதங்​களில் NTR ஆட்சி அமைத்​தார். ஆதலால் அரசி​யலில் எது​வும் நடக்​கும் என கூறினார். EPS-யை முதல்வராக்க வேண்​டும் என அண்ணாமலை பேசுவதை பார்க்கும் போது ஏன் அவர் இப்படி தடு​மாறி​விட்​டார் என தனக்கு தெரிய​வில்​லை என்றார்.

News August 24, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 24 – ஆவணி 8 ▶ கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶ கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: துவிதியை ▶ சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.

News August 24, 2025

ஓய்வறையில் கம்பீருக்கு வேற முகம்: ரிங்கு சிங்

image

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மைதானங்களில் எப்போதும் ஆவேசத்துடன் காணப்படக் கூடியவர். அவர் ஓய்வறையில் எவ்வாறு இருப்பார் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். அதில் ஓய்வறையில் கம்பீர் ஜாலியான பாடல்களை கேட்டு உற்சாகமாக இருப்பார் என்றும், அனைவரையும் ஒரே வைப்பில் வைத்து கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீனியர் வீரர்களுடன் ஜாலியாக பழகும் தன்மை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!