News April 8, 2024
சென்னை அதி வெப்பமாக இருப்பது ஏன்?

ஈரோட்டில் நேற்றைய வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். சென்னையில் 39 டிகிரி மட்டுமே. ஆனால், ஈரோட்டை விட சென்னையில் இருப்போர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். இதற்கு ஈரப்பதம்தான் காரணம். சென்னையில் எப்போதுமே ஈரப்பதம் அதிகம். உடல் வியர்வையை ஆவியாக விடாமல் இந்த ஈரப்பதம் தடுப்பதால் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்கின்றனர். எனவே, வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சேர்த்தே எப்போதும் கணக்கிட வேண்டும்.
Similar News
News March 16, 2026
அமெரிக்காவில் RSS மீது தடை விதிக்க பரிந்துரை

RSS மீது தடைவிதிக்க வேண்டுமென US அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது. மக்களின் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, RSS-ஐ தடை செய்து அதன் சொத்துகளை பறிமுதல் செய்யும்படி கூறியுள்ளது. அத்துடன் RSS உறுப்பினர்கள் US-க்குள் நுழைவதைத் தடை செய்யுமாறு USCIRF எச்சரித்துள்ளது.
News March 16, 2026
சென்னையிலேயே விசாரணை நடத்துங்க: விஜய்

கரூர் விவகாரம் தொடர்பான விசாரணையை சென்னையில் நடத்தக்கோரி விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி, சிபிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் விவகாரத்தில் இதுவரை 3 முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். ஆனால், தற்போது சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் பணிகள் இருப்பதால், சென்னையில் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 16, 2026
ELECTION: 3 நாள்கள் விடுமுறை..

மார்ச் 30 முதல் ஏப்.6-ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று TN தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில், மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி, ஏப்.3 புனித வெள்ளி, ஏப்.5 ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்கள் பொதுவிடுமுறை என்பதால், அந்த நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது; மற்ற அனைத்து நாள்களிலும் தாக்கல் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.


