News April 8, 2024

சென்னை அதி வெப்பமாக இருப்பது ஏன்?

image

ஈரோட்டில் நேற்றைய வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். சென்னையில் 39 டிகிரி மட்டுமே. ஆனால், ஈரோட்டை விட சென்னையில் இருப்போர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். இதற்கு ஈரப்பதம்தான் காரணம். சென்னையில் எப்போதுமே ஈரப்பதம் அதிகம். உடல் வியர்வையை ஆவியாக விடாமல் இந்த ஈரப்பதம் தடுப்பதால் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்கின்றனர். எனவே, வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சேர்த்தே எப்போதும் கணக்கிட வேண்டும்.

Similar News

News November 12, 2025

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

image

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

News November 12, 2025

நீண்ட ஆயுளுடன் வாழ இதை செய்யுங்க!

image

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், நமது உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நோய்களை தவிர்த்து உடல்நலத்தை பேண சில செயல்முறைகளை வேண்டியது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகை செய்தன. அதனை தற்போது நகர்ப்புறங்களிலும் எளிதாக பின்பற்றலாம். அவற்றை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

News November 12, 2025

இனி SMS-களுக்கும் கட்டணம்!

image

கோடாக் மகிந்திரா வங்கியில் மினிமம் பேலன்ஸாக ₹10,000 வைத்திருக்க வேண்டும். அதை பராமரிக்காமல் இருந்தால், மாதத்திற்கு 30 SMS மட்டுமே இலவசம் என அந்த வங்கி அறிவித்துள்ளது. 30 SMS-களுக்கு பிறகு, ஒரு SMS-க்கு ₹0.15 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. வரும் டிச.7 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. UPI, ATM, செக் டெபாசிட், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனை என அனைத்து SMS-களுக்கும் இது பொருந்தும்.

error: Content is protected !!