News August 22, 2025
நெல்லையப்பர் ஆவணி மூலத் திருவிழா தொடக்கம்

நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.
Similar News
News April 4, 2026
நெல்லை: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

நெல்லை மாவட்டம், வி கே புரம் மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்,. இவர் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் தன் வீட்டில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததை கண்டு அதை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக சரவணக்குமார் உயிரிழந்தார்.
News April 4, 2026
நெல்லை: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

நெல்லை மாவட்டம், வி கே புரம் மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்,. இவர் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் தன் வீட்டில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததை கண்டு அதை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக சரவணக்குமார் உயிரிழந்தார்.
News April 3, 2026
நெல்லை: இதயச் சிறையில் நாங்கள் உள்ளோம் – மு.க.ஸ்டாலின்

கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கருணாநிதியை யாரும் சிறைவைக்க முடியாது. அவரது இதயச் சிறையில் நாங்கள் உள்ளோம். கருணாநிதி பெயரைக்கூட சொல்ல எந்த யோக்கியதையும் பழனிச்சாமிக்கு இல்லை என நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.


