News April 8, 2024
ஆவாரம்பூ சர்பத் செய்வது எப்படி?

நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது ஆவாரம்பூ. ஆவாரம்பூவை வைத்து உடலுக்கு நன்மை தரும் சர்பத் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, ஏலக்காய், இஞ்சி துண்டுகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் ஆவாரம்பூ (ஊற வைத்தது) நீரை ஊற்றி, தேன் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News January 31, 2026
பிப்ரவரியில் வானில் நிகழும் அற்புதங்கள்!

பிப்ரவரி மாதம் வானில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 – பனி நிலவு, பிப்ரவரி 17 – சூரிய கிரகணம், பிப்ரவரி 18 – மிக மெல்லிய பிறை நிலவு புதன் கோளுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 19 – சனி கிரஹம் நிலவுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 28 – புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வான்வெளியில் ஒரு வில் போன்ற வடிவில் அணிவகுக்கும்.
News January 31, 2026
பிப்ரவரி முதல் அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் (திங்கள்கிழமை முதல்) தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் பிப்ரவரி 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
News January 31, 2026
நாடு முழுவதும் ஸ்டிரைக்

8-வது ஊதியக் குழு, ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நியமனம் தொடர்பான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்.12-ல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் & தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CCGEW) அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்யக்கோரி, சமீபத்தில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.


