News April 8, 2024
தமிழ்நாட்டில் பாஜக தேசியத் தலைவர்கள்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் பாஜக தேசியத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ஸ்மிருதி இரானி, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். நாமக்கல், நாகை, தென்காசி தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News August 12, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக, வட்டி முதலாக்கத்தின் (interest on capitalization) மீது விதிக்கப்பட்டுள்ள வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவையை செலுத்திவிட்டு சொத்து விற்பனை பத்திரத்தை பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
News August 12, 2025
OPS விவகாரத்தில் நயினார் மழுப்பலான பதில்

தோல்வி பயத்தில் உள்ள திமுக புதுப்புது திட்டங்களை கொண்டு வருவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய அவர், கல்வியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வது ஆய்வறிக்கை மூலம் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணிக்கு OPS மீண்டும் வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுபற்றி பின்னர் பேசலாம் என மழுப்பலாக பதிலளித்தார்.
News August 12, 2025
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. பலி எண்ணிக்கை உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கோயிலுக்கு சென்று திரும்பிய <<17376208>>வேன் <<>>பள்ளத்தில் விழுந்த விபத்தில், பலியான பெண்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. 20- 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேனில் இருந்து மீட்கப்பட்ட 27 பேர் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. CM தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து, பலியானோர் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.