News April 8, 2024

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இன்று முதல் போராட்டம்

image

தமிழகம் முழுவதும் இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் ஏப்.19 வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறை இ-ஃபைலிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கேற்ப எவ்வித கட்டமைப்பு வசதிகளையும் நீதிமன்றங்களில் செய்து தரவில்லை. இதனால், வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக கூறினர்.

Similar News

News August 12, 2025

கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக, வட்டி முதலாக்கத்தின் (interest on capitalization) மீது விதிக்கப்பட்டுள்ள வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவையை செலுத்திவிட்டு சொத்து விற்பனை பத்திரத்தை பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

News August 12, 2025

OPS விவகாரத்தில் நயினார் மழுப்பலான பதில்

image

தோல்வி பயத்தில் உள்ள திமுக புதுப்புது திட்டங்களை கொண்டு வருவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய அவர், கல்வியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வது ஆய்வறிக்கை மூலம் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணிக்கு OPS மீண்டும் வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுபற்றி பின்னர் பேசலாம் என மழுப்பலாக பதிலளித்தார்.

News August 12, 2025

25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. பலி எண்ணிக்கை உயர்வு

image

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கோயிலுக்கு சென்று திரும்பிய <<17376208>>வேன் <<>>பள்ளத்தில் விழுந்த விபத்தில், பலியான பெண்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. 20- 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேனில் இருந்து மீட்கப்பட்ட 27 பேர் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. CM தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து, பலியானோர் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!