News August 18, 2025
மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதிக்கான ரேஸில் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு(1952–1962) பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.
Similar News
News March 20, 2026
BREAKING: ரூபாய் மதிப்பு கடும் சரிவு

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக ₹93 ஆக சரிந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதும் ரூபாய் மதிப்பின் சரிவுக்கு காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
News March 20, 2026
NDA கூட்டணிக்கு ஆதரவு

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு சிறு கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் நயினாரை நேரில் சந்தித்து NDA கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தனர். அத்துடன், 234 தொகுதிகளிலும் NDA கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்துள்ளனர்.
News March 20, 2026
இந்த சீசனில் 3,000 ரன்களை அடிக்க விரும்புகிறேன்.. வைபவ்

வரும் IPL தொடரில் 2,000 முதல் 3,000 ரன்களை அடிப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி நகைச்சுவையாக கூறியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சீசனில் உங்களின் ரன் டார்கெட் என்ன என கேட்டதற்கு, வைபவ் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், தனிப்பட்ட சாதனைகள் முக்கியம் அல்ல, கோப்பையை வெல்வதே லட்சியம் எனவும் பேசியுள்ளார். இந்த சீசனில் வைபவ் எவ்வளவு ரன்கள் அடிப்பார் என நினைக்கிறீங்க?


