News August 17, 2025

தவறான புகாரால் எங்களை மிரட்ட முடியாது: ஞானேஷ்குமார்

image

அரசியலமைப்பின் வழியில் தன்னாட்சி அமைப்புடன் இயங்கும் தங்களை தவறான புகாரால் யாரும் மிரட்ட முடியாது என ECI தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார். BJP-க்கு ஆதரவாக மகாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ECI, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Similar News

News August 18, 2025

4 ஆண்டுகளில் முடியாதது, 7 மாதங்களில் முடியமா? இபிஎஸ்

image

கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும், ₹5.38 லட்சம் கடன் திமுக அரசு வைத்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை 45 நாள்களில் தீர்க்கப்படும் என்கின்றனர். 4 ஆண்டுகளில் முடியாததை 7 மாதங்களில் நிறைவேற்ற முடியமா என கேட்டார். மக்களின் ஆசையை தூண்டி வாக்குகள் பெறவே இத்திட்டம் என்றார்.

News August 18, 2025

1 கோடி கையெழுத்து இயக்கம்: செல்வப்பெருந்தகை

image

தேர்தல் ஆணையத்தை (ECI) வைத்து பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., குற்றஞ்சாட்டியது. ECI, ஒரு தன்னாட்சி அமைப்பு என தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார். இதனிடையே, ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ ராகுல் காந்தி தொடங்கினார். இந்நிலையில், ECI முறை​கேடு தொடர்பாக ​மக்களிடம் விழிப்​புணர்வு ஏற்படுத்துவதற்காக, 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்​தப்​படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

News August 18, 2025

SPORTS ROUNDUP: இந்திய அணியில் சுனில் சேத்ரி இல்லை!

image

◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் இரட்டையரில் பிரிவில் ராஜீவ் ராம்(USA)- நிகோலா மெக்டிக்(குரோஷியா) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
◆T20 பேட்டிங்கில் பாபர் அசாம் முன்னேற்றம் காண வேண்டி இருப்பதால், Asia Cup-ல் இடம் கிடைக்கவில்லை: PAK பயிற்சியாளர்.
◆தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி நடத்தும் புச்சிபாபு தொடர் இன்று தொடங்குகிறது.
◆நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணியில் சுனில் சேத்ரிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

error: Content is protected !!