News August 17, 2025

5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்?

image

2019-ல் இந்தியாவில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ₹35,000-ஆக இருந்தது. தற்போது அதன் விலை ₹1 லட்சத்தை கடந்துவிட்டது. 2019-2025 காலக்கட்டத்தில் தங்கத்தின் விலை 200% உயர்வை கண்டிருக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் 2030-ல் தற்போதிருக்கும் விலையை விட தங்கத்தின் விலை 2 மடங்காக உயருமாம். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தில் விலை ₹2 லட்சத்தை கடக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

Similar News

News March 19, 2026

தேர்தல் நேரத்தில் ‘அமைதிப்படை’ ரீ-ரிலீஸ்

image

தமிழில் எத்தனையோ அரசியல் நையாண்டி படங்கள் வந்தாலும், எப்போதுமே டாப்பில் இருப்பது ‘அமைதிப்படை’ படம்தான். 1994-ல் வெளியான இப்படம் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இருப்பதுதான் தனிச் சிறப்பு. அப்படிப்பட்ட ‘அமைதிப்படை’ ஏப்ரல் 10-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யபடுகிறது. இதன் புதிய டிரெய்லர் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது. தேர்தல் நேரத்தில் படம் வருவதால் நல்ல வைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 19, 2026

தவெகவுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமிக்கு வலியுறுத்தல்

image

புதுச்சேரி NDA-வில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைப்பதில் பாஜக, NR காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறியில் நீடிக்கிறது. இதனிடையே CM ரங்கசாமி தலைமையிலான நடந்த அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் ரங்கசாமி சேலத்திலுள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு ரங்சாமி சென்றுள்ளார்.

News March 19, 2026

ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு: ஈரான்

image

தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் படுகொலைக்குப் பழிவாங்குவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சூளுரைத்துள்ளார். இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகள் எதிரிகளின் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவதாகவும், இதற்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் விலை கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!