News April 7, 2024

ரூ.325 கோடியை திரும்பப் பெற்ற FPI முதலீட்டாளர்கள்!

image

இந்திய பங்குச்சந்தையில் ஏப்ரல் முதல் வாரத்தில், பங்குகளில் முதலீடு செய்த ரூ.325 கோடி முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். பங்குகளின் மதிப்பு உச்சத்தில் இருப்பது, மக்களவைத் தேர்தல் ஆகிய காரணிகளால் முன்னெச்சரிக்கையாக அவர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. அதே நேரம், ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.1,215 கோடியை அன்னிய முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்துள்ளனர்.

Similar News

News March 11, 2026

சற்றுமுன்: சீமானுடன் இணைந்தார்

image

2026 தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், நாம் தமிழருக்கு ராஷ்டிரிய உலமா கவுன்சில் மற்றும் தமிழக சுன்னத் ஜமாத் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. நிர்வாகிகளுடன் சேர்ந்து சீமானை நேரில் சந்தித்த கவுன்சிலின் மாநில தலைவர் அக்ரம் கான், 234 தொகுதிகளிலும் NTK வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.

News March 11, 2026

உங்க கனவில் பாம்பு வருதா.. இதுதான் அர்த்தம்

image

சிலருக்கு கனவில் அடிக்கடி பாம்பு வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகுதிசை, ராகுபுத்தி நடக்கும்போது அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?

News March 11, 2026

பலாத்காரத்தால் 42 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்

image

நாட்டிலேயே முதல்முறையாக, 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த <<19352666>>ஹரிஷை<<>> கருணைக்கொலை செய்ய SC இன்று அனுமதி வழங்கியது. இதற்கு முன்பு நடந்த கருணைக் கொலை வழக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? 1973-ல் பாலியல் வன்கொடுமையால் கோமாவுக்கு சென்ற அருணாவை கருணைக்கொலை செய்ய அனுமதி 2011-ல் கோரப்பட்டது. அவர் 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்தும், கோர்ட் அதை ஏற்கவில்லை. இறுதியில் 2015-ல் நிமோனியா காய்ச்சலால் அவர் இயற்கை மரணமடைந்தார்.

error: Content is protected !!