News April 7, 2024
மல்லையா செய்த பாவங்களே காரணம்?

RCB அணியின் தொடர் தோல்விகளுக்கு தொழிலதிபர் விஜய் மல்லையாவின் செய்த பாவங்களே காரணம் என்று நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கூறிவருகின்றனர். ‘பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு, மல்லையா செய்த பாவம் ஆர்சிபி-க்கு’ என்பன போன்ற பதிவுகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் ₹9,000 கோடி மோசடி செய்த மல்லையா 2008 – 2016 வரை RCB அணியின் உரிமையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2026
FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
News March 18, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. புதிய அறிவிப்பு

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் UMANG App-ல், இப்போது ‘மேரா ரேஷன்’ என்ற அம்சத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் அரசு அலுவலகங்களுக்கோ, ரேஷன் கடைகளுக்கோ செல்வதற்கு பதிலாக, உமாங் செயலி மூலம் உங்கள் மொபைல் போனிலேயே ரேஷன் சேவைகளை பெறலாம்.
News March 18, 2026
கார்கே, சரத் பவாரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்: PM மோடி

ராஜ்யசபா பதவிக்காலம் முடியலாம், ஆனால் அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை என ஓய்வுபெறும் 37 ராஜ்யசபா MP-களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் PM மோடி பேசினார். தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகியோர் தங்கள் வாழ்நாளின் பாதி காலத்தை பார்லிமெண்ட் பணிகளிலேயே செலவிட்ட தலைவர்கள் என்றார். புதிதாக தேர்வாகியுள்ள MP-க்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


