News August 8, 2025
ஆணுறுப்பில் மிளகாய் பொடி.. அஜித் மரண வழக்கில் திருப்பம்

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவி அஜித்தை போலீஸ் சித்ரவதை செய்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்நிலையில், தனிப்படை போலீஸுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி கொடுத்ததே அஜித்தின் நண்பர் பிரவீன் குமார்தான் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
Similar News
News August 8, 2025
டிரம்ப்புக்கு செக்.. ரஷ்யாவை நெருங்கும் இந்தியா

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு, இந்திய-அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 1947 முதல் ரஷ்யாவுடன் நெருக்கத்தை பேணிய இந்தியா, 90-களுக்கு பிறகு அமெரிக்காவுடன் கைகோர்த்தது. ரஷ்யாவுடன் முழுவதுமாக உறவை துண்டித்தால், அது சீனா-ரஷ்யா உறவை வலுப்படுத்தி, ஆசிய பிராந்தியத்தில் தனக்கு பாதகமாக முடியும் என இந்தியா கருதுகிறது. இனி டெல்லியின் பார்வை மாஸ்கோவை நோக்கி திரும்பலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
News August 8, 2025
மகளிர் உரிமைத் தொகை.. இதனை மறக்க வேண்டாம்!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தில் சில தகவல்களை பூர்த்தி செய்யாமல் சிலர் விட்டுவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு எண், பேங்க் அக்கவுண்ட் எண், IFSC Code, ஆதார் எண் உள்ளிட்டவற்றை சரியாக பூர்த்தி செய்து, அதற்கான அசல் சான்றிதழ்களை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தகவல்களை பூர்த்தி செய்வதில் சிலர் தவறு செய்வதாக குறிப்பிட்டுள்ள அரசு, முறையாக பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
News August 8, 2025
நல்ல தூக்கம் வேணுமா… பாயில் படுங்க!

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் அமைதியான உறக்கம் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும்.