News April 6, 2024
பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பி.ஏ.பி., பாசன கால்வாயில் குளித்த சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கால்வாயில் குளிக்கச் சென்ற திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், வீணா, ப்ரீத்தா ஆகியோர் வீடு திரும்பவில்லை. இன்று தேவனாம்பாளையம் அருகே 3 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
ஷ்ரேயஸ் ஐயருக்கு பதில் யார்?

SA அணிக்கு இந்தியாவில் 5 T20, 3 ODI, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ODI தொடர் வரும் நவ. 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது அவருக்கு பதில், 4-வது விக்கெட்டாக யார் சரியான சாய்ஸாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மாவை Replacement-ஆக களமிறக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளது. யாரு கரெக்ட் சாய்ஸ்?
News November 11, 2025
3 மாதங்களாக செல்போன் ரீசார்ஜ் பண்ணலயா.. உஷார்!

3 மாதங்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த நம்பரை Recycle என்ற முறையில், Airtel புதிதாக நம்பர் வாங்குபவர்களுக்கு கொடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி வாங்கிய புதிய நம்பரில், முன்னர் அதை முன்னர் பயன்படுத்தியவரின் Facebook, Uber, Swiggy போன்ற அக்கவுண்டுகளில் தானாகவே Log-in செய்ய முடிவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இது மட்டுமின்றி ஆதார், UPI அக்கவுண்டுகளின் தகவல்களும் திருடு போகும் அபாயம் உள்ளது.
News November 11, 2025
நடிகர் ஸ்ரீகாந்திடம் ED தீவிர விசாரணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் <<18225496>>ஸ்ரீகாந்த்<<>> ஆஜரானார். போதைப்பொருள் வழக்கில் அக்.28ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இன்று ஆஜராகியுள்ள இவரிடம், போதைப் பொருள் வாங்கியது குறித்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.


