News August 5, 2025

அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அஜித் மரண வழக்கு!

image

அஜித்குமார் மரண வழக்கில் தொடர்புடைய 5 தனிப்படை போலீசாரை 2 நாள்கள் விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 5 காவலர்களும் தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது. காவலர்களை விசாரிக்கும்போது, முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News August 6, 2025

உடலுக்கும் உண்டு கால அட்டவணை

image

*3-5 AM-மூச்சுப் பயிற்சி, தியானம் *5-7 AM-காலைக் கடன்களை கழிக்கும் நேரம் *7-9 AM-சாப்பிடும் நேரம் *9-11 AM- செரிமான நேரம் (சாப்பிடுதல் கூடாது) *11AM-1PM: இதய நோயாளிகள் கவனமாக இருக்கும் நேரம் *1-3 PM-மிதமான சிற்றுண்டி *3-5 PM-நீர்க்கழிவுகளை வெளியேற்றும் நேரம் *5-7 PM-தியானம், இறை வழிபாடு *7-9 PM- இரவு உணவு நேரம் *9-11 PM-அமைதியாக உறங்கலாம் *11PM -1AM-அவசியம் உறங்கவும் *1-3 AM-கட்டாயம் உறங்கவும்.

News August 6, 2025

ஒரு நாட்டையே உருவாக்கிய இளைஞர்!

image

400 பேரைக் கொண்ட குட்டி நாடு ஒன்றை உருவாக்கி, அதற்கு தன்னை தானே அதிபர் என்று அறிவித்துள்ளார் 20 வயது இளைஞர் டேனியல் ஜாக்சன். குரோஷியா – செர்பியா இடையே யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் நிலத்தை தான், ‘ரிபப்ளிக் ஆஃப் வெர்டிஸ்’ என்ற நாடாக அறிவித்துள்ளார் இந்த ஆஸ்திரேலிய இளைஞர். அதோடு கொடி, நாணயத்தையும் அறிவித்து ‘யாரு சாமி இவன்’ என நெட்டிசன்களை கூற வைத்துள்ளார்.

News August 6, 2025

BREAKING: எம்எல்ஏ தோட்டத்தில் SI கொடூரமாக கொலை

image

மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரை SI சண்முகசுந்தரம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர், SI-ஐ விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ், குற்றவாளிகளை தேடி வருகிறது.

error: Content is protected !!