News May 8, 2025

மகளிர் தொகை: புதிய ரேஷன் அட்டைதாரருக்கு முன்னுரிமை

image

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ₹ 1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் வருகிற ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அப்போது புதிதாக ரேஷன் அட்டைகள் வாங்கிய குடும்ப பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசின் ஆட்சியில் 18.46 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கலாம் எனத் தெரிகிறது.

Similar News

News November 4, 2025

பணவரவை அதிகரிக்கும் ஏலக்காய் பரிகாரம்!

image

பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றி வைத்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, ஒரே ஒரு ஏலக்காயை வலது கையில் வைத்து, முழு மனதுடன் ‘ஓம் நமோ நாராயணாய கோவிந்தாய மாதவாய விஷ்ணவே நமஹ’ என கூறி வழிபட வேண்டும். பிறகு, கையில் இருக்கும் ஏலக்காயை பணம் வைக்கும் இடத்தில், வைக்க வேண்டும். SHARE IT.

News November 4, 2025

தமிழகத்தில் SIR பணிகள் இன்று தொடக்கம்

image

TN-ல் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று முதல் டிச.4-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெற உள்ளது. SIR கணக்கீட்டுப் படிவத்தை மக்கள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுடன் இணைந்து அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ல் வெளியாகும்.

News November 4, 2025

அடுத்த தலைவர் கலகத்தை தொடங்கினார்.. பரபரப்பு!

image

தமிழ்நாடு காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை என மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் அடுத்த கலகத்தை தொடங்கியுள்ளார். தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், வாரிசு அரசியலை ஓரங்கட்டிவிட்டு, உழைக்கும் மகளிருக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தேசிய தலைமையை வலியுறுத்துவேன் எனவும் கூறியுள்ளார். நடிகை குஷ்பு, விஜயதரணி ஆகியோரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து விலகியது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!