News May 8, 2025

10-வது தேர்ச்சி போதும்… வங்கியில் 500 காலியிடங்கள்!

image

பேங்க் ஆப் பரோடாவில் 500 பியூன் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் 24 காலியிடங்கள் உள்ளன. 10வது தேர்ச்சி பெற்று, 18- 26 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹19500 – ₹37815 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News December 7, 2025

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

image

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு சென்று செலவு செய்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News December 7, 2025

பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு அறிவிப்பு

image

வீட்டில் இருந்தபடியே பத்திர பதிவு பணிகளை மேற்கொள்ள TN அரசு புதிய திட்டம் கொண்டுவரவுள்ளது. ‘ஸ்டார் 3.0’ திட்டம் மூலம் சொத்துகளை வாங்குவது, விற்பது, திருமண பதிவு உள்ளிட்ட பணிகளை வெறும் 10 நிமிடங்களில் வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கான பிரத்யேக சாப்ட்வேரில் விவரங்களை பதிவு செய்து பத்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

News December 7, 2025

ஜாகீர் கானிடம் இருந்து பிரசித் கற்க வேண்டும்: அஸ்வின்

image

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ODI தொடரில் ரன்களை வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருந்த பிரசித் கிருஷ்ணாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் அவர் தனது திறனுக்கு ஏற்ப பந்து வீச அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என அஸ்வின் அறிவுரை வழங்கியுள்ளார். ஜாகீர் கானின் பந்து வீச்சில் இருந்து டெக்னிக்கை பிரசித் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!