News April 28, 2025
PTR-க்கு கூடுதல் இலாகா ஒதுக்காதது ஏன்?

அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் இலாகா ஒதுக்காதது பேசுபொருளாகியுள்ளது. பிடிஆரின் நேர்மையான கருத்துகள், அரசியல் மற்றும் உட்கட்சிக்குள் விருப்பமில்லாத பரபரப்பை உருவாக்குவதாக கட்சி தலைமை கருதுகிறது. இது கட்சி நிர்வாகத்திற்கு சற்று சவாலாக இருப்பதால், அவருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News August 25, 2025
BREAKING: திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி நீக்கம்?

திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி(MMK) உள்ளிட்ட <<17514578>>6 கட்சிகளுக்கு<<>> ஏன் தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி ECI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தாததால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை சென்னையில் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
News August 25, 2025
தமிழகத்தில் 6 கட்சிகளுக்கு புதிய சிக்கல்!

2019 முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத தங்கள் கட்சியின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. *கோகுல மக்கள் கட்சி, *இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, *இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், *மக்கள் தேசிய கட்சி, *மனிதநேய மக்கள் கட்சி, *பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை நாளை சென்னையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
ரொம்ப நேரம் Scroll பண்ணி, Shorts பாத்துட்டே இருக்கீங்களா..

பல மணி நேரம் Shorts வீடியோக்களை பார்ப்பது, மூளைக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என சீனாவின் Tianjin Normal University கண்டறிந்துள்ளது. இது போன்ற வீடியோக்கள் பார்க்கும்போது அதிகமாக டோபமைன் சுரப்பதால், போதைக்கு அடிமையாவதற்கு இணையான ஒரு நிலையை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், செய்யும் வேலையில் கவனம் குறைவது, ஞாபக சக்தி பிரச்னை போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.