News April 27, 2025
ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கஞ்சா வழக்கில் கைது!

சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, நடிகர் ஷைன் டாமும் போதைபொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார்.
Similar News
News March 19, 2026
திருநெல்வேலி: 70 வயது முதியவரின் கொடூர மனம்!

கொண்டா நகரத்தைச் சேர்ந்த கணபதி (70) என்ற முதியவர் அங்குள்ள 4 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் அச்சத்துடன் தெரிவித்ததின் பேரில் சிறுமியின் தாயார் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சுத்தமல்லி போலீசார் கணபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 19, 2026
அரசியல் சர்ச்சையில் சிக்கிய ‘துரந்தர்-2’

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘துரந்தர்-2’ திரைப்படம் அரசியல் சர்ச்சைகளையும் கூடவே அழைத்து வந்துள்ளது. குறிப்பாக பிரபல தாதா தாவுத் இப்ராகிம் உடன் காங்கிரஸுக்கு மறைமுக தொடர்பு, பாஜக ஆட்சியின் பண மதிப்பிழப்பு எனச் சர்ச்சையான விவகாரங்கள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. இதற்கு SM-ல் ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கமெண்ட்
News March 19, 2026
திமுக அமைச்சருக்கு அதிர்ச்சி

வரும் தேர்தலில் இளைஞர்களை அதிகளவில் தேர்தல் களத்தில் இறக்கிவிட திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாம். அந்த வகையில் திருமயம் தொகுதியில் உதயநிதிக்கு மிக நெருக்கமான புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் கைலாசத்தை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாம். இதனால், இந்த தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் ரகுபதிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


