News April 25, 2025

26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

image

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Similar News

News January 8, 2026

வங்கி கணக்கில் ₹10,000.. அரசு இன்று முக்கிய அறிவிப்பு

image

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன்(ஜன.8) நிறைவடைகிறது. ஜன.31-ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <>www.dge.tn.gov.in<<>> தளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அதனை பூர்த்தி செய்து HM வசம் ஒப்படைக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனே முந்துங்கள். SHARE IT

News January 8, 2026

கடைசி நேரத்தில் பராசக்திக்கு வந்த ஷாக்!

image

சுதா கொங்கரா இயக்கத்தில் SK, ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் இந்த படத்திற்காக ஸ்பெஷல் பீரிமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தியேட்டரில் மொத்தமுள்ள 905 சீட்களில் வெறும் 16 மட்டுமே புக்கான நிலையில், ஷோ கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News January 8, 2026

கூட்டணியில் தேசியமும் திராவிடமும்: ராமதாஸ்

image

பாமக (அன்புமணி) NDA-வில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பாமக அமைக்கும் கூட்டணி தேசியமாகவும் இருக்கலாம், திராவிடமாகவும் இருக்கலாம் என ராமதாஸ் சஸ்பென்ஸாக தெரிவித்துள்ளார். அதேநேரம், அன்புமணியுடன் EPS கூட்டணி பேசியது சட்டவிரோதம் என குறிப்பிட்ட அவர், EPS தன்னுடன் இதுவரை பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!