News April 25, 2025
26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Similar News
News April 29, 2025
பாஜகவில் இணையும் ப்ரீத்தி ஜிந்தா?

உங்களது சமீபகால பதிவுகள் பாஜக சார்பாக இருக்கிறதே, நீங்கள் அக்கட்சியில் இணைய போகிறீர்களா என ரசிகர் ஒருவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் X தளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகை பதிலளித்துள்ளார். மேலும், கோயில், மகா கும்பமேளாவிற்கு செல்வது, தன்னுடைய அடையாளத்தை நினைத்து பெருமைப்படுவது என்பது பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
பஹல்காம் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு?

ஹமாஸ் அமைப்பு உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளுக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை தாக்கும்போது, அதை லைவ் வீடியோவாக வெளியிட்டது உலக தீவிரவாதிகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்ததாகவும், அதன் பிறகு அந்த அமைப்பினர் PoK-க்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கும், ஹமாஸ் தாக்குதலுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
150 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த BLINKIT.. ஏன் தெரியுமா?

நாளை மறுநாள் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், 150 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது BLINKIT நிறுவனம். அதீத வெப்பத்தின் காரணமாக மதியம் 12 – 4 மணி வரை இடைவேளை, காத்திருப்பு இடங்களில் நிழல் கூடாரங்கள், தண்ணீர் மற்றும் ஃபேன், சம்மருக்கு ஏற்ற காட்டன் யூனிஃபார்ம்கள் ஆகியவற்றை கேட்டு போராடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, Gig ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கமெண்ட் என்ன?