News April 24, 2025
என் குடும்பத்தை தவறாக பேசினால்.. ARR-ன் அந்த மனசு!

கடவுளே ஆனாலும், பொது வாழ்வில் இருந்தால் அவரும் விமர்சிக்கப்படுவார் என ARR தெரிவித்துள்ளார். விவாகரத்திற்கு பிறகு, தனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக பேசினால், அவர்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன், அவர்களை நல்வழிப்படுத்த பிரார்த்திப்பேன் எனவும் ARR தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தாய், சகோதரி, மனைவி இருப்பதால், மற்றவர்களைப் பற்றி அநாவசியமாக பேச வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 12, 2025
BREAKING: புதிதாக தொடங்குகிறார் அண்ணாமலை

இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து அவர்களுக்கு உதவும் வகையில் முதலீட்டு நிறுவனம் தொடங்கும் பணி ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். <<17687290>>விவசாய நிலம் வாங்கியது<<>> தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அவர், மத்திய அரசின் PMEGP திட்டத்தில் பால் பண்ணை அமைக்க கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். சர்ச்சைகளுக்கு எல்லாம் அடுத்தாண்டு தனது IT பதில் சொல்லும் என்றார்.
News September 12, 2025
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

திருமண மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சீமான் மன்னிப்பு மனுவை சமர்ப்பிக்காவிட்டால், வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடித்துக் கொண்டிருந்த போதே, திருமண ஆசை காட்டி ஏமாற்றியவர், பொதுவெளியில் அவதூறாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நடிகை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
News September 12, 2025
கதறும் Employees.. எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்!

வேலை செய்யும் 88% இந்தியர்களுக்கு லீவு கிடைக்காமல், நேர வரைமுறையின்றி வேலை செய்வதாகவும், பொது விடுமுறையிலும் வேலை செய்ய நிறுவனங்கள் வலியுறுத்துவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. வேலை நேரத்தில் டீ பிரேக் கூட கிடைப்பதில்லையாம். வீட்டுக்கு சென்ற பிறகு போன் வந்து அதனை எடுக்காமல் விட்டால், Promotion கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் 79% பேர் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கும் ரெஸ்ட் வேண்டாமா..?