News April 24, 2025
11 பேரின் உயிர்களை காத்த உப்பு சாப்பாடு

கொச்சியை சேர்ந்த ஆல்பி ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை பஹல்காம் செல்கையில், சாலையோர கடையில் பிரைட் ரைஸ் சாப்பிட்டனர். அதில் உப்பு அதிகம் இருந்ததால், புதிய உணவு தயாரிக்க 1 மணி நேரம் காத்திருந்தனர். அந்த நேரத்தில்தான் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடையில் நேரம் தாமதப்படாமல் பஹல்காம் சென்றிருந்தால், அவர்களும் உயிரிழந்திருப்பர்.
Similar News
News January 11, 2026
எதுக்கு சமத்துவ பொங்கல்? வானதி

பொங்கலே கொண்டாடாத சிறுபான்மையின மக்களை வைத்து CM ஸ்டாலின் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதாக வானதி விமர்சித்துள்ளார். சிறுபான்மை மக்கள் அவர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதை மதிப்பதாக கூறிய அவர், எங்காவது சிறுபான்மை மக்கள் தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்து சூரியனை வணங்குவதை பார்த்திருக்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதன்மூலம் அவர் இந்து மக்களை ஏமாற்றுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News January 11, 2026
பிக்பாஸ் சீசன் 9 வின்னர் இவர்தானா?

பிக்பாஸ் 9-ன் வின்னர் பெண் போட்டியாளராக தான் இருப்பார் என ஆரம்பம் முதலே சிலர் கூறிவந்தனர். ஆனால் கானா வினோத்துக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவரே டைட்டில் அடிப்பார் என நம்பப்பட்டது. இந்நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து டைட்டில் ரேஸில் இருந்த சாண்ட்ராவும் எவிக்ட் ஆனதால், திவ்யா கணேஷ்தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்கின்றனர். உங்கள் கருத்து?
News January 11, 2026
அவருக்கு பதில் இவர்.. BCCI அறிவிப்பு

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் இருந்து விலகிய ரிஷப் பண்டுக்கு பதிலாக மாற்று வீரரை BCCI அறிவித்துள்ளது. முதல் ODI இன்று நடைபெறவுள்ள நிலையில், பயிற்சியின்போது பண்டின் விலா பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


