News April 23, 2025
ஜாமின் கொடுத்ததே தவறு: ஒப்புக்கொண்ட நீதிபதிகள்

உங்களுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம்; அதனை நாங்கள் இப்போது ஒப்புக் கொள்கிறோம் என்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் பதவியில் தொடர்வதா (அ) ஜாமினா என்று முடிவெடுக்க, அவருக்கு 4 நாள்கள் கெடு விதித்துள்ளனர். ஜாமின் இல்லையெனில், சிறை செல்ல நேரிடும். என்ன முடிவெடுப்பார் செந்தில் பாலாஜி?
Similar News
News April 24, 2025
ஹய்யா ஜாலி.. இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப். 17 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதியத்துடன் இறுதித் தேர்வு நிறைவடைகிறது. அதன்பின்னர், அவர்களுக்கும் விடுமுறைதான். கோடை விடுமுறை நிறைவடைந்து ஜுன் 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமே ஜாலிதான்!
News April 24, 2025
40 திருமணம் செய்வேன்.. வனிதா விஜயகுமார் காட்டம்

ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் என பரவிய செய்திக்கு நடிகை வனிதா விஜயகுமார் காட்டமாக பதிலளித்துள்ளார். ‘மிஸஸ் & மிஸ்டர்’ பட போஸ்டரை வைத்து இருவருக்கும் திருமணம் என செய்தி பரவியது. இதுகுறித்து பேசிய வனிதா, 40 திருமணம்கூட செய்வேன் என முதலில் கூறினார். பின்னர், ‘4 திருமணம்கூட செய்யவில்லை. என்னை அசிங்கப்படுத்த வேண்டாம். நான் திருமணம் செய்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை’ எனக் குறிப்பிட்டார்.
News April 24, 2025
பயங்கரவாதம்.. ஓரணியில் நிற்க வேண்டும்: ஷமி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தை கண்டித்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய வன்முறை நமது சமூக கட்டமைப்பை மட்டுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.