News April 23, 2025
இவனே வீரன்.. அதனால்தான் வீரமரணம் கிடைத்ததோ!

பஹல்காம் தாக்குதலின் போது, அப்பகுதியில் குதிரை சவாரி தொழில் செய்யும் சையது அடில் ஹூசைன் ஷா என்பவர் செய்த செயல் கண்கலங்க வைத்துள்ளது. அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்டதும் உடனே அவர், தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட தீவிரவாதி, அவரை சுட்டு கொன்றுள்ளான். தனது உயிரை துச்சமாக நினைத்து, மக்களை காப்பாற்ற முயன்றுள்ளார் அந்த வீரன்.
Similar News
News April 24, 2025
காஷ்மீர் நரகமாகி வருகிறது: சல்மான்

ஜம்மு & காஷ்மீர் போன்ற ஒரு சொர்க்கம், தீவிரவாத தாக்குதல்களால் தற்போது நரகமாகி வருவதாக சல்மான் கான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். அதேபோல், மதத்தின் பேரால் இந்த பேரழிவை நடத்த யாருக்கும் உரிமை இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜும் கண்டித்துள்ளார்.
News April 24, 2025
10 பெண்களுடன் திருமணம்.. சிக்க வைத்தது கொலை

சத்தீஸ்கரில் 10 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னனை கொலை சம்பவம் சிக்க வைத்துள்ளது. துலா ராம் என்பவர் 9 பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். அவர்கள் பிரிந்து சென்ற நிலையில், 10ஆவதாக ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் கல்யாண வீட்டில் அரிசி, சேலை உள்ளிட்டவற்றை திருடியதாக சந்தேகித்து அவரை கொலை செய்து காட்டில் வீசியுள்ளார். சடலம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி, துலா ராமை கைது செய்துள்ளது.
News April 24, 2025
நாங்கள் இந்திய மக்களுடன் நிற்கிறோம்: கம்மின்ஸ்

இக்கடுமையான தருணத்தில் ஆஸ்திரேலியர்களான நாங்கள் இந்திய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். பஹல்காமில் நடந்தது மனவேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் இந்திய மக்களுக்கு ஆதரவு குரல்கள் வரும் நிலையில், கம்மின்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.