News April 23, 2025

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

image

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 24, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 24- சித்திரை- 11 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: தேய்பிறை

News April 24, 2025

காஷ்மீர் நரகமாகி வருகிறது: சல்மான்

image

ஜம்மு & காஷ்மீர் போன்ற ஒரு சொர்க்கம், தீவிரவாத தாக்குதல்களால் தற்போது நரகமாகி வருவதாக சல்மான் கான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். அதேபோல், மதத்தின் பேரால் இந்த பேரழிவை நடத்த யாருக்கும் உரிமை இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜும் கண்டித்துள்ளார்.

News April 24, 2025

10 பெண்களுடன் திருமணம்.. சிக்க வைத்தது கொலை

image

சத்தீஸ்கரில் 10 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னனை கொலை சம்பவம் சிக்க வைத்துள்ளது. துலா ராம் என்பவர் 9 பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். அவர்கள் பிரிந்து சென்ற நிலையில், 10ஆவதாக ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் கல்யாண வீட்டில் அரிசி, சேலை உள்ளிட்டவற்றை திருடியதாக சந்தேகித்து அவரை கொலை செய்து காட்டில் வீசியுள்ளார். சடலம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி, துலா ராமை கைது செய்துள்ளது.

error: Content is protected !!