News April 23, 2025

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

image

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 5, 2025

‘MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்க’

image

50 கிலோ வாட் வரை கட்டண உயர்வில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறு நிறுவனங்கள் 120 கிலோ வாட் வரை பயன்படுத்துவதால் இந்த அறிவிப்பு உதவாது என தமிழ்நாடு தொழில் அமைப்புகள் தெரிவித்தன. கோவையில் பேட்டியளித்த இந்த அமைப்பினர், MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சூரிய மின்சக்தி பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கட்டணத்தையும் நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

News July 5, 2025

இரவு 10 மணிக்கு மேல் கரண்ட் கட்… ஏன் தெரியுமா?

image

ரஷ்யாவில் நாளுக்கு நாள் மக்கள்தொகை குறைந்து வருவதால், அதை தடுக்க வித்தியாசமான யோசனைகள் முன்வைத்துள்ளது அதன் ‘பாலியல் அமைச்சகம்’. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வீடுகளுக்கான மின்சாரத்தையும், இன்டர்நெட் இணைப்பையும் கட் செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், தம்பதியினர் உறவில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும், குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி இருக்கு?

News July 5, 2025

மதம் கடந்த மனிதநேயம்

image

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தனித்துவமான பண்பாகும் அதனை உணர்த்தும் வகையிலான சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கோவில் பூசாரி ஒருவரின் 5 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக 60 லட்சம் பணம் தேவைப்பட்டது. இதனால் பயாஸ் என்பவரின் உதவியை நாடினார் பூசாரி. சிறுமி நிலை பற்றி இணையத்தில் வீடியோ வெளியிட்ட பயாஸ், 16 1/2 மணி நேரத்துக்குள் 75 லட்சம் வசூலித்து பூசாரியிடம் வழங்கியுள்ளார்.

error: Content is protected !!