News April 23, 2025

ரேஷன் கடைகள் முன்பு நிழல் கூரை: அமைச்சர் அறிவிப்பு

image

அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நிழல் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் மக்கள் வரிசையில் நிற்கையில், வெயிலில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சக்கரபாணி, மரங்கள் நடவும், நிழல் கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News

News October 30, 2025

யார் இந்த புதிய CJI சூரியகாந்த்?

image

53-வது CJI-ஆக நியமிக்கப்பட்டுள்ள <<18152053>>சூர்யகாந்த்<<>>, ஹரியானாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். 1984-ல் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர். இமாச்சல் தலைமை நீதிபதியாகவும், ஹரியானா & பஞ்சாப் ஐகோர்டில் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியவர். வரும் நவ., 24 முதல் 2027 பிப்., 9-ம் தேதி வரை CJI-ஆக பணியாற்ற உள்ளார். அரசியல், தேர்தல் நடைமுறை சார்ந்த பல முக்கிய வழக்குகள் இவரது பணிக்காலத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

News October 30, 2025

‘சக்தித் திருமகன்’ திருட்டு கதையா?

image

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.

News October 30, 2025

கேரளாவில் தொடங்கிய SIR

image

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!