News April 22, 2025

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

image

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் போர்டு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளது. அதாவது, டிக்கெட் வாங்கிய பக்தர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளது. முன்னதாகவே வருவதால், கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பக்தர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News

News April 22, 2025

பிராமணர்கள் மீதான அவதூறு.. அனுராக் காஷ்யப் மன்னிப்பு

image

‘புலே’ பட விவகாரத்தில், பிராமணர்கள் குறித்து அனுராக் காஷ்யப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இதுதொடர்பாக மன்னிப்பு கோரிய அனுராக் தற்போது மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் கண்ணியத்தை மறந்துவிட்டதாகவும், முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டதற்கு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.

News April 22, 2025

ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கைது

image

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் PM மோடியின் புகைப்படத்தை எரித்ததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

News April 22, 2025

BREAKING: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

image

2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 1,132 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜன.7 முதல் ஏப்.9 வரை நேர்காணல் நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் <>www.upsc.gov.in<<>> இணையதளத்தில் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் ஷக்தி துபேவும், தமிழக அளவில் சிவச்சந்திரனும் முதலிடம் பிடித்துள்ளனர்.

error: Content is protected !!