News April 16, 2025
வன்முறைக்கு அமித் ஷாவே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
EX வங்கதேச PM இறுதி சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்

நாளை நடைபெற உள்ள EX வங்கதேச PM ஹலிதா ஜியாவின் இறுதி சடங்கில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. <<18716289>>ஹலிதாவின்<<>> 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவிற்கு எதிராக அரசியல் செய்ததும், வங்கதேசத்தின் முன்னணி ஆயுத விற்பனையாளராக சீனா உருவெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
News December 31, 2025
IPL-ல் ₹13 கோடி.. ஆனால் தேசிய அணியில் இடமில்லை!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை SRH அணி ₹13 கோடி என்ற பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், 2026 டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ஹேரி புரூக் கேப்டனாக தலைமை தாங்க உள்ளார். துணை கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை. 2026 பிப்ரவரியில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது.
News December 31, 2025
திருத்தணி கொடூரத்தை கண்டு நெஞ்சம் பதறுகிறது: பா.ரஞ்சித்

திருத்தணியில் நடந்த கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுவதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் எனவும், வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.


