News April 16, 2025
வன்முறைக்கு அமித் ஷாவே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
பாண்டியர் கோட்டை புகும் சோழ இளவல்?

சங்க கால தமிழ், எயினர் மரபு, ரணதீர பாண்டியனின் தீரம் என ‘யாத்திசை’ படத்தை வரலாற்று பிரமாண்டமாக படைத்திருப்பார் இயக்குநர் தரணி ராசேந்திரன். அவர் அடுத்து இயக்கும் படத்தில், சோழ இளவல் ‘பொன்னியின் செல்வர்’ ரவி மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை ரவி மோகனே தயாரிக்க இருக்கிறாராம்.
News September 18, 2025
கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS: CM ஸ்டாலின்

திராவிடம் என்றால் என்ன என்று தனக்கு தெரியாது என சொன்னவர், தற்போது அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பதாக EPS-ஐ CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பு இல்லாமல் என்னை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாகவும், கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS-ன் தரத்தை மக்கள் அறிவர் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், ரெய்டில் இருந்து தப்பிக்க அதிமுகவை அடகு வைத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News September 18, 2025
சட்டசபையில் வெளியான 256 அறிவிப்புகளை கைவிட முடிவு

புதைவட கேபிள்களாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 256 அறிவிப்புகளை, செயல்படுத்த சாத்தியமில்லை என்பதால் அதை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உயரதிகாரிகள் கூறும்போது, 2021-ல் புதிய அரசு பொறுப்பேற்ற பின், இதுவரை வெளியான 8,634 அறிவிப்புகளில், 4,516 அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3,455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.