News April 3, 2024
காவிரி மேலாண்மை வாரியம் நாளை கூடுகிறது

காவிரி மேலாண்மை வாரியத்தின் 29ஆவது கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்கெனவே தமிழகம்-கர்நாடகா இடையே பிரச்னை நீடித்து வரும் சூழலில், இந்தக் கூட்டத்தில் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
Similar News
News January 2, 2026
விஜய்க்கு ஹிட் கொடுத்த மியூசிக் டைரக்டர்ஸ்!

நடிகர் விஜய்யின் சினிமா கரியரில் காதல் பாடல்கள் மட்டுமல்லாமல், தியேட்டரை அதிர வைத்த ஓப்பனிங் மாஸ் பாடல்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. விஜய்க்கு மறக்க முடியாத ஹிட் பாடல்களை வழங்கியவர்கள் லிஸ்டில் அனிருத் மட்டுமல்லாமல் பல முன்னணி இசையமைப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News January 2, 2026
பள்ளிகள் திறப்பு… தமிழக அரசு புதிய உத்தரவு

ஜன.5-ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளிக்கல்வித் துறை <<18716471>>முக்கிய உத்தரவு<<>> பிறப்பித்துள்ளது. *பள்ளிகளில் பழுதான கட்டடங்கள், வகுப்பறைகள் பூட்டப்பட்டு இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். *ஆய்வகங்களில் இருக்கும் காலாவதியான பொருள்களை பள்ளியின் இருப்பு பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டும். *உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன் வகுப்பறைகள், இணையதள வசதிகள் சரியான முறையில் இயங்க வேண்டும். SHARE IT.
News January 2, 2026
‘அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார் CM ஸ்டாலின்’

<<18692998>>நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள்<<>> சிலரை போலீசார் கொடூரமாக தாக்கியது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது கோரிக்கையை ஆதரித்த CM ஸ்டாலின், அதிகாரம் கிடைத்ததும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக விமர்சித்துள்ளார். அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை முடக்க முடியாது என்று கூறிய அவர், ஆசிரியர்களை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


