News April 14, 2025

மலையாள நடிகர் திலீப் சிக்கிய வழக்கின் தீர்ப்பு எப்போது?

image

2017-ல் பிரபல நடிகை காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை மே 21-ல் நடைபெறும் என கோர்ட் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் திலீப் கைதாகி 3 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு தற்போது முடிவுக்கு வருகிறது. இறுதி விசாரணை நாளில் பாதிக்கப்பட்டவர், எதிர்தரப்பினர் வாதங்களை முன்வைத்தால் தீர்ப்பு மற்றொரு நாளில் வழங்கப்படும்.

Similar News

News July 5, 2025

PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

image

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News July 5, 2025

கண் பார்வைக்கு கேரட்டை விட இது பெஸ்ட்

image

கண் பார்வைக்கு இந்த 5 உணவுகளை நீங்கள் உணவில் சேர்ந்தால் போதும் மக்களே. *எல்லா வகையான கீரைகளும் கண்ணுக்கு நல்லது *மத்தி உள்ளிட்ட கொழுப்பு அதிகமுள்ள மீன்களை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும் *நட்ஸ் பார்வையை மேம்படுத்த உதவும் *கட்டாயம் உங்கள் உணவில் முட்டையை சேர்க்க வேண்டும் *ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் கொண்ட உணவுகள் கண்ணுக்கு சிறந்தது. நல்லா சாப்பிடுங்க கண் பத்திரம்…

News July 5, 2025

தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

image

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!