News April 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 226 ▶குறள்: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. ▶பொருள்: பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
Similar News
News March 14, 2026
பெட்ரோலை கேன்களில் பிடிக்காதீர்.. அரசு எச்சரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய பெட்ரோல் & இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது. TN-ல் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்வதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும் என தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பங்க் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பங்க்குகள் & டீலர்கள் விதிகளை மீறக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.
News March 14, 2026
பழம்பெரும் நடிகை மது காலமானார்

பழம்பெரும் நடிகை மது மல்ஹோத்ரா(72) காலமானார். 80’ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த அவரது கண்ணசைவை காணவே தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்கள் ஏராளம். அமிதாப் பச்சனின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், SATTE PE SATTA, KARZ, VISHWANATH உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 14, 2026
விலை மளமளவென குறைந்தது.. 1 கிலோ 8 ரூபாய் மட்டுமே!

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டதன் எதிரொலியாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், அவற்றின் விலை சரசரவென குறைந்துள்ளது. தக்காளி 1 கிலோ ₹8 முதல் ₹15 வரையே விற்கப்பட்டு வருகிறது. உருளை(₹15), கேரட்(₹30), புடலங்காய்(₹15), வெண்டை(₹30), அவரை(₹15) விலையும் கணிசமாக குறைந்துள்ளது. திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை சரிந்துள்ளது. உங்க ஊரில் எப்படி?


