News April 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 226 ▶குறள்: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. ▶பொருள்: பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
Similar News
News January 19, 2026
அதிமுகவை வழிநடத்தும் CM ஸ்டாலின்: சேகர்பாபு

அதிமுக தேர்தல் வாக்குறுதியில், திமுகவின் முன்னெடுப்பை தான் பின் தொடர்ந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், சிந்தனையில் ஏதாவது இருந்தால் தானே புதிய திட்டங்களை சிந்திக்க முடியும்; அதிமுகவினருக்கு சிந்தனையில் ஒன்றுமே இல்லை என்றும் விமர்சித்துள்ளார். CM ஸ்டாலினின் வழிகாட்டுதலில் தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை இதிலிருந்து ஏற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 19, 2026
விஜய்யை பார்த்து எவ்வளவு பயம்: புகழேந்தி

EPS துரோகி என்ற பட்டம் பெற்றதால் மக்கள் அவரை ஏற்கவில்லை என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். அதிமுக பலமிழந்து விட்டதாக கூறிய அவர், தற்போது களத்தில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் போட்டி என்றார். மேலும், ஜனநாயகனுக்கு சென்சார் அனுமதி மறுக்கப்பட்டதால், விஜய்யை பார்த்து எவ்வளவு பயம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், இப்படத்தை வைத்து அரசியல் சூழ்ச்சி நடக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதராக என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


