News April 3, 2025

இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

image

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 16, 2026

கடன் தள்ளுபடி.. அரசு வெளியிட்ட தகவல்

image

கடந்த 11 ஆண்டுகளில் ₹9.75 கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அதிகபட்சமாக 2020 நிதியாண்டில் ₹1.59 லட்சம் கோடியும், குறைந்தபட்சமாக 2025 நிதியாண்டில் ₹47,568 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார். 2025 நிதியாண்டு முதல் வாராக்கடன் தள்ளுபடி தொகை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News March 16, 2026

பெண்ணை கடித்து குதறிய நாய்கள்.. போலீசார் அதிர்ச்சி

image

புனேவில் பெண் ஒருவர் இறப்பு தொடர்பாக வெளியான CCTV போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டபோது, முதலில் கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் CCTV-ல் பதிவாகியிருந்த காட்சிகள் அவர்களை. அதிகாலையில் நடந்துசென்ற பெண்ணை சூழ்ந்த நாய்கள் சரமாரியாக கடித்து குதறியதும், அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

News March 16, 2026

பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கும் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. SHARE IT

error: Content is protected !!