News April 3, 2025
இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: CM-ன் சிறப்பு பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி ஆட்டத்தை மாற்றிய வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்கு CM ஸ்டாலின் சார்பில் ₹8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி (17 காளைகள்) 2-ம் இடத்தை பிடித்தார். சிறந்த காளையான மந்தை முத்துக்கருப்பனின் உரிமையாளர் விருமாண்டி பிரதர்ஸ்-க்கு DCM சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
News January 15, 2026
Grok AI-க்கு கடிவாளம் போட்ட எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் ‘X’ தளம், அதன் Grok AI மூலம் <<18745124>>ஆபாசமாக<<>> சித்தரிக்கும் படங்களை உருவாக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெண்கள், குழந்தைகளின் புகைப்படங்களை Grok AI மூலம் ஆபாசமாக மாற்றப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, X நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த கட்டுப்பாடு சாதாரண பயனர்களுக்கு மட்டுமல்லாமல், பணம் செலுத்தி சந்தா வாங்கியுள்ள பயனர்களுக்கும் பொருந்தும்.
News January 15, 2026
குளிர்காலத்தில் வரும் முக்கிய பிரச்னை.. சரி செய்ய TIPS!

குளிர்காலத்தில் எளிதில் முடி வறண்டு, முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். இதனை தடுக்க 5 வழிகளை பின்பற்றினால் போதும். ➤தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்த்து, 3 நாளைக்கு ஒருமுறை தலைக்கு குளிக்கலாம் ➤Sulphate, Paraben free ஷாம்பு பயன்படுத்துங்கள் ➤கண்டிஷனரை பயன்படுத்துவது அவசியம் ➤முடியை பளபளப்பாக வைக்க சீரம் போடுங்கள் ➤இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியம். SHARE.


