News April 3, 2025
அண்ணனின் கடனை செலுத்த முடியாது: நடிகர் பிரபு

பட தயாரிப்புக்காக ராம்குமார் பெற்ற கடனை, தன்னால் அடைக்க முடியாது என பிரபு தெரிவித்துள்ளார். ராம்குமார் பெற்ற ரூ.3 கோடிக்காக, தனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அண்ணனின் கடனை தாங்கள் அடைக்கலாமே என நீதிபதிகள் கேட்ட போது, தன்னால் கடனை செலுத்த முடியாது என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 14, 2025
அதிமுக நிர்வாகி விபத்தில் மரணம்: இபிஎஸ் இரங்கல்

அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) நிர்வாகி செந்தில்குமாரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த இவரது மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வாகன ஓட்டிகள், குறிப்பாக இளைஞர்கள், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, மிகுந்த பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
News April 14, 2025
விண்வெளிக்கு பறக்கும் சிங்க பெண்கள்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் காதலி லாரென், பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பெண்கள் அடங்கிய குழு இன்று விண்வெளிக்கு பறக்க உள்ளது. ஜெஃப் பெசோஸின் Blue Origin நிறுவனத்தின் NS-31 திட்டத்தின் படி இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு, பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விண்வெளி பயணமாக இது அமைய உள்ளது. இந்த பயணம் பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும் என அப்பெண்கள் குழு தெரிவித்துள்ளது.
News April 14, 2025
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. மேலும், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை வரை ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் எனவும் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.