News April 3, 2025
‘Ghibli’ செய்வோர் ஜாக்கிரதை.. சைபர் கிரைம் எச்சரிக்கை

சோஷியல் மீடியாக்களில் உங்களது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். டிரெண்டிங் மோகத்தில் நீங்கள் பதிவிடும் போட்டோ, பிறந்தநாள் தகவல்களை திருடி, அனுமதியின்றி உங்கள் தரவுகளை எடுக்க முடியும். இதனால், விழிப்போடு இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது டிரெண்டாகும் OpenAI ஜிபிலி செய்தவர்கள் அவர்களது போட்டோ, DOB பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News August 18, 2025
கட்சி தாவலுக்கு EPS-ன் செயல்பாடுகளே காரணமா?

அதிருப்தி அதிமுக புள்ளிகளை, <<17438694>>திமுக<<>> தன் பக்கம் இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு EPS, கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களை காரில் கூட அனுமதிப்பதில்லை, கருத்துகளை கூற விடுவதில்லை என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஜெயலலிதா போல் ஒற்றை முகமாக இருக்க EPS முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொண்டர்கள் வரை அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுவதாக வைகைச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.
News August 18, 2025
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (ஆக.18) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 1,084 புள்ளிகள் உயர்ந்து 81,681 புள்ளிகளிலும், நிஃப்டி 363 புள்ளிகள் அதிகரித்து 24,995 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Maruti Suzuki, Hero Motorcop, PG Electorplast Ltd ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், Hindustan Petroleum உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.
News August 18, 2025
உக்ரைன் NATO-வில் சேரக்கூடாது: டிரம்ப்

உக்ரைன், NATO-வில் சேரக்கூடாது என்பதற்காகவே ரஷ்யா போரைத் தொடங்கியது. இந்நிலையில், உக்ரைன் NATO-வில் சேர முடியாது என மத்தியஸ்தம் செய்துவரும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா பகுதியையும் உக்ரைன் உரிமை கொண்டாடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி விரும்பினால் போரை உடனடியாக நிறுத்த முடியும் (அ) தொடர முடியும் என்றும் டிரம்ப் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.